யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கால்கோள் விழா கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி ஏஞ்சலிக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் புதிய மாணவர்களுக்கான வரவேற்பும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட கல்வி திணைக்கள பாடசாலை வேலைகள் பணிப்பாளர் திருமதி அபிராமி வித்யாபரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ ஆலோசகர் நளாயினி ஜெகதீசன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்கள்.

அத்துடன் மாணவர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்வும் அன்று மதியம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்தந்தை ரவிச்சந்திரன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin