யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜெறோம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகள் மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்ற திருவிவிலிய தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
சலேசியன் துறவற சபையை சேர்ந்த அருட்சகோதரி அனிசா அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் மற்றும் யாழ். வலய கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி. விக்ரொறியா எல்விஸ் பிறெஸ்லி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin