யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா நிகழ்வுகள் 15ஆம் 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.
கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வும் தொடர்ந்து மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் இயக்குநர் அருட்தந்தை ஜெயசேகரம் அவர்களின் தலைமையில் பண்பாட்டுத் திருப்பலியும் இடம்பெற்றன.
தொடர்ந்து 20ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் பொங்கல்விழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
மன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளின் கிராமிய நடனம், திருமறைக்கலாமன்ற இசைக்கலைஞர்களின் பொங்கல் பாடல்கள், ஜொணி மதுரநாயகம், தர்மினி றஜீபன் ஆகியோரின் கவிதை மற்றும் நாடகப் பயிலக மாணவர்களின் “இதுவும் கடந்து போகும்” நாடகம் என்பன மேடையேற்றப்பட்டன.

By admin