யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் மன்ற அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் மன்றத்தின் பிரதி இயக்குனர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நற்செய்திப் பகிர்வும் மகிழ்வூட்டும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் கனடா திருமறைக் கலாமன்றத்தின் அனுசரணையில் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

By admin