யாழ்ப்பாண மாவட்ட சக வாழ்வு அமைப்பின் ஆலோசனை குழு அங்கத்தவராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் நீதி, மற்றும் சிறைச்சாலை விவகாரம், யாப்பு சீர்திருத்தங்கள் அமைச்சின் அமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ச அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வு கௌரவ விஜயதாச ராஜபக்ச அவர்களின் தலைமையில் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நாகவிகாரை மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் அங்கத்தவராக அனைத்து இன, மத மக்களிடையே நல்லுறவை பேணி சக வாழ்வை மேம்படுத்த ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் முகமாக நீதி அமைச்சினால் இப்பதவியும் சான்றிதளும் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்ததக்கது.

By admin