யாழ். மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித ஜோசப்வாஸ் இறையியில் கல்லூரியின் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கா.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தினை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலையத்திலுள்ள புனித ஜோசப்வாஸ் இறையியில் கல்லூரியில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கல்லூரி அதிபர் அருட்தந்தை ரவிறாஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கல்லூரி திருப்பீடத்தின் ஊர்பானியானா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் இங்கு வழங்கப்படும் கிறிஸ்தவக் கற்கைகள் இளமாணிப்பட்டம் மேற்படிப்புகளை தொடர்வதற்கும் தொழில்வாய்ப்புக்களை பெறுவதற்கும் வழிவகுக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin