முல்லைத்தீவு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 73 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் மருதமடு அன்னையின் முடிசூட்டு 100ஆவது யூபிலி ஆண்டில் மருதமடு அன்னை திருச்சுருபம் யாழ். மறைமாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு பங்கை தரிசித்ததன் நினைவாக முல்லைத்தீவு நகர மத்தியில் அமைக்கப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சொருபத்தையும் அன்றைய தினம் ஆயர் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

By admin