பாசையூர் புனித அந்தோனியார் றோ.க. மகளிர் வித்தியாலய பழைய மாணவர் சங்கமும் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கமும் இணைந்து முன்னெடுத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாசையூர் புனித அந்தோனியார் றோ.க. மகளிர் வித்தியாலயத்தில் கல்வி பயின்று தரம் 5 புலமைப் பரிசில், க.பொ.த சாதாரணம் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 20 வரையான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

By admin