தவக்கால நற்செயல் முயற்சிகளில் ஒன்றாக மல்வம் – உடுவில் பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து கோப்பாய் அன்னை திரேசா சகோதரிகளால் நடாத்தப்படும் அன்பின் இல்லம் முதியோர் இல்லத்தை தரிசித்து அங்கு நடைபெற்ற மகிழ்வூட்டல் நிகழ்வுகளில் பங்குபற்றியதுடன் முதியோருக்கான அன்பளிப்புக்களையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் 70 வரையான மாணவர்களும் 10 மறையாசிரியர்களும் கலந்துகொண்டனர்.

By admin