பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை மறைப்பாடசாலையில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி. விக்டோரியா அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள், குழுச் செயற்பாடுகள், விளையாட்டுக்கள் ஊடாக மறையாசிரியர்களை நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் 20 வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin