ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்விவார சிறப்பு நிகழ்வுகள் கடந்த 01ஆம் திகதி தொடக்கம் 06ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர் தின நிகழ்வு, கருத்துரைகள், குறும்பட காட்சிப்படுத்தல், கலைநிகழ்வுகள், போட்டிகள், தலைமைத்துவ கருத்தமர்வு, களப்பயணம், பங்கு தரிசிப்பபு என்பன இடம்பெற்றன.

இறுதி நாள் நிகழ்வுகள் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதுடன் அன்றைய தினம் காலை திருப்பலியும் தொடர்ந்து மாலை போட்டிகளும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

By admin