மயிலிட்டி வள்ளுவர்புரம் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் பங்கு மக்களின் தோழமை உறவை வலுப்படுத்தும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குப்படுத்தலில் அருட்தந்தை டிலோஜன் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியை தொடர்ந்து முலவை புனித செபமாலை அன்னை ஆலய மக்களுடன் இணைந்த அன்பிய உணவுபகிர்வு இடம்பெற்றது.

இவ்வுணவு பகிர்வில் வேற்றுமைகளை களைந்து அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து தோழமை விருந்தை உண்டனர்.

அத்துடன் நவநாள் காலங்களில் ஆற்றப்படும் மறையுரையை மையமாக வைத்து நடைபெற்ற வினா விடை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

By admin