தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வங்காலை புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது.
வங்காலை உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பியோ தர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து இளையோருக்கான கருத்தமர்வும் இடம்பெற்றன.
தொடர்ந்து அன்றைய நாளை சிறப்பிக்கும் முகமாக பாரம்பரிய விளையாட்டுக்களும் பரிசளிப்பும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 100ற்கும் அதிகமான இளையோர் கலந்து சிறப்பித்தனர்.

By admin