மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்திருயாத்திரை நிகழ்வு மடு வீதியிலிருந்து ஆரம்பமாகி பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தலத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் 400 வரையான இளையோர் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin