மண்டைதீவு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் புதிய சமையலறை திறப்புவிழாவும் கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன.

வித்தியாலய அதிபர் திரு. சேவியர் சுவைனஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 20 மாணவர்கள் மாணவத்தலைவர்களாக சின்னம்சூட்டி வைக்கப்பட்டார்கள்.

தீவக வலயக்கல்வி பணிப்பாளர் திரு. திருஞானசம்மந்தப்பிள்ளை அவர்கள் பிரதம விருந்தினராகவும் மண்டைதீவு பங்குத்தந்தை அருட்தந்தை தொம்மையப்பு யேசுதாஸன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் திரு திருமதி. யேசுதாசன் றீற்றம்மா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் திறந்துவைக்கப்பட்ட புதிய சமையலறைக் கட்டடத்திற்கான அனுசரணையை கனடா நாட்டில் வசிக்கும் பழைய மாணவரான திரு. டன்சன் அவர்கள் வழங்கியிருந்தார்.

By admin