மணல்காடு பங்கில் திருப்பாலர் சபை பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 27ஆம் திகதி சனிக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட திருப்பாலர் சபை இயக்குனர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்கள் கலந்து திருப்பலி ஒப்புக்கொடுத்து 90 சிறார்களுக்கு சின்னம் சூட்டிவைத்தார்.
இந்நாளை சிறப்பிக்குமுகமாக கலை நிகழ்வுகளும் பட்டத்திருவிழாவும் இடம்பெற்றன. கலை நிகழ்வுகளிலும் பட்டத்திருவிழாவிலும் பருத்தித்துறை மற்றும் மணல்காடு பங்கு சிறார்கள் இணைந்து 100ற்கும் மேற்பட்ட பட்டங்களை மணல்காட்டு கடற்கரையில் ஏற்றினார்கள்.
யாழ். மறைமாவட்டத்தில் முதல் தடவையாக முன்னெடுக்கப்பட்ட பட்டத்திருவிழா இதுவென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin