மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரிய கல்லாறு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் டெறன்ஸ் றாகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை அருட்தந்தை அன்னதாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அத்துடன் செங்கலடி புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா பங்குதந்தை அருட்தந்தை நிகஸ்டன் பீற்றஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை சொமஸ்கன் சபை அருட்தந்தை மகிமைதாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin