மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சன் டி போல் மத்திய சபை அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை இக்னேசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வின்சன் டி போல் தேசிய சபை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை யூட்ராஜ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் கல்முனை மறைக்கோட்ட ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை ரெறன்ஸ் றாகல், செங்கலடி மறைக்கோட்ட ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை அலன்ராஜ் மற்றும் மறைக்கோட்டப் பிரதிநிதிகளெனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மத்திய சபைக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன் தலைவராக மட்டக்களப்பு
மறைக்கோட்டத்தின் திரு. றொபட் அலோசியஸ் அவர்களும், செயலாளராக செங்கலடி மறைக்கோட்டத்தின் திரு. ரூபகீர்த்தி அவர்களும் பொருளாளராக கல்முனை மறைக்கோட்டத்தின் திரு. நிர்மலகுமார் அவர்களும் உப தலைவராக மட்டக்களப்பு மறைக்கோட்டத்தின் திரு. சில்வெஸ்ரர் அவர்களும் உப செயலராக திருமதி. நிசாந்தினி அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

By admin