சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இளவாலை மறைக்கோட்ட இளையோர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பால்நிலை சமத்துவம் தொடர்பான கருத்தமர்வு கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சட்டத்தரணி திருமதி கார்த்திகா, திரு. சுதாகரன், திருமதி. நியாளா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள் ஊடாக இளையோரை நெறிப்படுத்தினார்கள்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை பிறாயன் அவர்கள் கலந்துகொண்டதுடன் இளவாலை மறைக்கோட்ட பங்குகளைச் சேர்ந்த 75 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin