மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பல் சமய ஒன்றிய அங்கத்துவர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலய மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜெயநிக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் பல்சமய தலைவர்கள் அங்கத்தவர்களென 30ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட ரீதியில் பல் சமயங்களையும் ஒன்றிணைத்து கடந்த காலங்களில் முன்னொடுக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றியும் எதிர் காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டன.

1986ஆம் ஆண்டு அப்போதைய ஆயர் பேரருட்தந்தை கிங்சிலி சுவாம்பிள்ளை அவர்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஒன்றியம் நாட்டில் நிலவிய யுத்தம் மற்றும் கோவிட் 19 பொருந்தொற்று போன்று இடர்காலங்களில் ஏராளமான பணிகளை மக்களுக்கு ஆற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin