இலங்கை பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு கரித்தாஸ் செடெக் நிறுவனத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக ஆன்மீக பணியகங்களுக்கான தேசிய இயக்குநர் அருட்தந்தை றுவான் பெரேரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பணியகத்திற்கு பொறுப்பான காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமண்ட் கிங்சிலி விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் 8 பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகங்களில் ஆன்மீக பணியகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் பணிகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. யாழ். மறைமாவட்டத்திலிருந்து யாழ். பல்கைலைக்கழக அன்மீக இயக்குநர் அருட்தந்தை மக் டொனால்ட் அவர்கள் கலந்துகொண்டார்.

 

By admin