பருத்தித்துறை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழங்குபடுத்தலில் கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட இத்தியானம் மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்திலும் பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்திலும் இடம்பெற்றன.

இத்தியானங்களை அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெயராஜா கூஞ்ஞ, அருட்தந்தை வென்சஸ்லஸ், செபமாலைதாசர் சயையை சேர்ந்த அருட்தந்தை ராஜேஸ், அருட்தந்தை லோரன்ஸ் மற்றும் ஆசிரியை எல்விஸ் விக்ரோறியா ஆகியோர் வளவாளர்களாக கலந்து நெறிப்படுத்தினார்கள்.

இந்நிகழ்வில் 155 வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin