கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் கடந்த 8 வருடங்கள் அதிபராக பணியாற்றிய அருட்தந்தை கிருபாகரன் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய அருட்தந்தை நெவின்ஸ் யோகறாஜ் பீரிஸ் மற்றும் அருட்தந்தை ஆதர் யஸ்ரின் ஆகியோரின் பணி கௌரவிப்பு நிகழ்வு கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை அங்கு நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அருட்தந்தையர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருமட மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin