யாழ். மறை அலை தெலைக்காட்சியினால் இவ்வருடம் நடாத்தப்பட்ட பசாம் பாடல் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கான மதிப்பீட்டு நிகழ்வு கடந்தவாரம் மறைநதி கத்தோலிக்க ஊடகமையத்தின் ஆயர் யஸ்ரின் கலையகத்தில் நடைபெற்றது. இப்பசாம் போட்டியில் 37 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்த நிலையில் இப்போட்டியாளர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடுவர்களின் தீர்ப்போடு பார்வையாளர்களின் எண்ணிக்கை விருப்போடு மதிப்பீடு செய்யப்பட்டனர்.

13வயதின் கீழ் பிரிவில் 01ஆம் இடத்தை யஸ்ரின் ஜீவா அகஸ்ரினா அவர்களும் 02ஆம் இடத்தை யூடின் யதுசியன் அவர்களும் 03ஆம் இடத்தை பிரபாகரன் நமிசா அவர்களும் 15 தொடக்கம் 19 வரையான வயது பிரிவில் 01ஆம் இடத்தை அன்ரனிஸ் லெனாட் அபிர்ணா அவர்களும் 02ஆம் இடத்தை றஜிதா ஜெயக்குமார் அவர்களும் 03ஆம் இடத்தை செல்வதீபன் திசானி அவர்களும் 20 தொடக்கம் 40 வரையான வயது பிரிவில் 01ஆம் இடத்தை லூக்டிமெல்சன் அவர்களும் 02ஆம் இடத்தை றோஜர் மேரி யஸ்மிலா அவர்களும் 03ஆம் இடத்தை ஜீவறயணிக்குமார் ஜெனற்மேரி அவர்களும் 41 வயதின் மேல் பிரிவில்01ஆம் இடத்தை சத்தியசீலன் அன்ரன் அருள்வண்ணன் அவர்களும் 02ஆம் இடத்தை ஜெயராசசீலன் மரிய தயானந்தி அவர்களும் 03ஆம் இடத்தை கெனடி நந்தினி நிரன்யலா அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்.

By admin