தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 01ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் சியோன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள், நற்கருணை ஆராதனை, இளையோர்களுக்கான கருத்தமர்வு என்பன இடம்பெற்றதுடன் இளையோர் கிளிநொச்சி புனித திரேசம்மாள் ஆலயத்தை தரிசித்து அங்குள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைத்தனர்.

தொடர்ந்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் விளையாட்டுக்களும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 20 வரையான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin