தேசிய மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய மறையாசிரியர் தேர்வு 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாளைய தினம் நடைபெறவுள்ளதென யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முதலாம் இரண்டாம் மூன்றாம் பிரிவுகளை உள்ளடக்கி நடைபெறவுள்ள இத்தேர்வுக்கு யாழ். மறைமாவட்டத்திலிருத்து 392 பேர் விண்ணப்பித்துள்ளதுடன், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, நெடுந்தீவு றோ.க மகளிர் கல்லூரி, ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி, இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம், பருத்தித்துறை புனித தோமையார் றோ.க. பெண்கள் பாடசாலை, கிளிநொச்சி புனித திரேசா கல்லூரி, முழங்காவில் இரணைத்தீவு றோ.க.த.க. பாடசாலை, முல்லைத்தீவு றோ.க பாடசாலை ஆகிய 8 பரீட்சை நிலையங்களில் இத்தேர்வு
இடம்பெறவுள்ளதெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin