தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு செம்பியன்பற்று சென் பிலிப்நேரிஸ் மற்றும் நெல்லியான் சென் யூட் இளையோர் ஒன்றியத்தினரால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபை அருட்சகோதரர் ஜெனிஸ்ரன் அவர்களின் உதவியுடன் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாலை இளையோருக்கான தீப்பாசறை நிகழ்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 30 வரையான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin