தாழையடி செம்பியன்பற்று குடாரப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தூய கார்மேல் அன்னை ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

08ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை கிளிநொச்சி பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சத்தியசீலன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சுருபப்பவனியும் ஆசிரும் இடம்பெற்றதுடன் தோழமை விருந்தும் பரிமாறப்பட்டது.

 

By admin