தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக மாதாந்த ஒன்றுகூடல் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்துறை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் செல்வன் லக்ஸ்மன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய நிர்வாகத்தெரிவும் பொதுநிலையினர் கழக யாப்பு விளக்க உரையும் இடம்பெற்றன.

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் மற்றும் செயலாளர் திரு. அலெக்ஸ் அமலரட்ணம் ஆகியோர் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

 

By admin