தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்றுறை புனித மரியாள் ஆலயத்தில் நடைபெற்றது.
கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் வழிகாட்டலில் கழக தலைவர் லக்ஸ்மன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை திருக்குடும்ப கன்னியர் மட முதன்மை அருட்சகோதரி தயாநாயகி செபாமலை அவர்கள் கலந்து ஜூபிலி இறைவேண்டுதல் ஆண்டு தொடர்பாக கருத்துரை வழங்கினார்.
தொடர்ந்து இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

By admin