திருவுளப்பணியாளர் சபை முதல்வர் அருட்தந்தை மார்க் ஆந்திரே அவர்கள் இலங்கை மற்றும் இந்நியாவிற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த 20ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்து பல்வேறு இடங்களிலுமுள்ள திருவுளப்பணியாளர் சபை பணித்தளங்களை தரிசித்துவருகின்றார்.

20ஆம் திகதி இலங்கை நாட்டை வந்தடைந்த இவர் அன்றைய தினம் கண்டி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை வலன்ஸ் மென்டிஸ் மற்றும் பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நிஸாந்த சில்வா ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதுடன் கண்டி திருவுள பணியாளர் பெரிய குருமடத்தையும் தரிசித்தார்.

தொடர்ந்து 21ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தொடர்ந்து யாழ்ப்பாணம் திருவுள பணியாளர் சிறிய குருமடத்தை தரிசித்து அங்கு சபை அருட்தந்தையர்கள் மற்றும் குருமட மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர் 22ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்திற்கு சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களை சந்தித்ததுடன் 23ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்தில் நடைபெற்ற திருவுள சபை திருத்தொண்டர் அன்றூ பிராங்லின் பத்மலிங்கம் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கிலும் கலந்துகொண்டார்.

அத்துடன் 24ஆம் திகதி வியாழக்கிழமை மன்னார் பேசாலை வெற்றிநாயகி அன்னை மற்றும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை குழந்தை இயேசுபுரம் குழந்தை இயேசு ஆலயங்களில் பொதுநிலையினரை சந்தித்ததுடன் 26ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருவுள பணியாளர் சிறிய குருமடத்திலும் மாலை வவுனியா கோமரசங்குளம் பிரதேசத்திலும் பொதுநிலையினரை சந்தித்துள்ளார்.

மேலும் 28ஆம் திகதி இந்நியாவிற்கு செல்லவுள்ள இவர் அங்கு கேரளா, தமிழ்நாடு மாகாணங்களின் திருவுள சபை குருக்களை சந்தித்து மீண்டும் இலங்கைக்கு திரும்பி வருகின்ற 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி பேரருட்தந்தை பிறையன் உடக்குவே அவர்களையும் சந்திக்கவுள்ளார்.

 

By admin