தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதியோருக்கான சிறப்பு நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து முதியோர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு விவேகானந்தா உளவளத்துணைக் குழுவினரால் முதியோர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான முதியோர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin