தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லாறு, பெரியகுளம், விசுவமடு, தர்மபுரம் ஆகிய ஆலயங்களிலிருந்து தனித்தனியாக பாதயாத்திரையை ஆரம்பித்த இறைமக்கள் வீதி வழியாக பயணித்து பிரமந்தனாறு இறை இரக்க ஆலயத்தை சென்றடைந்து அங்கு நடைபெற்ற திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலியில் பங்குபற்றினார்கள்.

By admin