தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்ட்ட முதியோருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப்,கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை யஸ்ரின் மற்றும் பங்கில் பணியாற்றும் மரியாயின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், கலைநிகழ்வுகள் ஊடாக முதியோரை வழிப்படுத்தியதுடன் முதியோருக்கான பரிசளிப்பும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 75 வரையான முதியோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin