சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

15ஆம் திகதி சனிக்கிழமை கொடியெற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin