சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக சிலாபம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய அவர்கள் திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்றுள்ளார்.
அருட்தந்தை அவர்கள் 1997 ஆம் சிலாபம் மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்படார். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் பணியாற்றியதுடன் உரோம் ஊர்பானியான பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டத்துறையில் கலாநிதி பட்டத்தைப்பெற்று மறைமாவட்ட நீதித்துறை ஆயர் பதில்குருவாகவும் மற்றும் அம்பிட்டிய தேசிய குருமடத்தில் 2013 லிருந்து 2019வரை இறையியல் கற்கைநெறி பீடத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
2021ஆம் ஆண்டு சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை வலன்ஸ் மென்டிஸ் அவர்கள் கண்டி மறைமாவட்ட ஆயராக திருத்தந்தையினால் நியமனம்பெற்ற பின்பு சிலாபம் மறைமாவட்டம் ஆயர் இன்றி இருந்தது. அக்காலப்பகுதியில் பேரருட்தந்தை வலன்ஸ் மென்டிஸ் அவர்கள் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக இருந்து சிலாபம் மறைமாவட்டத்தை வழிநடத்தினார்.
இந்நிலையில் தற்போது அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய அவர்கள் திருத்தந்தை அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin