முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் அருட்சகோதரி டெனட் சுவாம்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை முன்னாள் அதிபரும் ஐரோப்பிய பழைய மாணவர் சங்க இணைப்பாளருமான திரு. இசுதோர் பெர்னான்டோ, அவரது துணைவியார் திருமதி இசுதோர் பெர்னான்டோ மற்றும் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி றஜனி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் 40 மாணவர்கள் மாணவத்தலைவர்களாக சின்னம் சூட்டப்பட்டார்கள்.

By admin