தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தலத் வருடாந்த திருவிழா வருகிற ஆவணி மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளதால் அதற்கான ஆயத்தங்கள் பரிபாலகர் அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
27ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வருகின்ற மாதம் 4ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு செபமாலையுடன் நற்கருணை விழாவும் 5ஆம் திகதி காலை 7.00 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறவுள்ளதெனவும் தெரிவித்துள்ள பரிபாலகர் அவர்கள் திருவிழாவிற்கு வருகைதரவுள்ள பக்தர்களுக்காக திருவிழா அன்று காலை 4.30 மணி முதல் யாழ். மத்திய மற்றும் ஊர்காவற்துறை பேருந்து நிலையங்களிலிருந்து பயண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதெனவும் மேலும் கூறியுள்ளார்.

By admin