சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல இடங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போராட்டங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றன.

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகி கிளிநொச்சி டிப்போ சந்தியை சென்றடைந்து பிரகடணம் வாசிக்கப்பட்டது.

இப்பேரணியில் கிளிநொச்சி பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ், வேலன் சுவாமி குருக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பொதுமக்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.

By admin