அகில இலங்கை ரீதியாக சமாதான நீதவான்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்நியமனத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 18பேர் சமாதான நீதவான்களாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கான சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்வு 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றது.
சமாதான நிதவானாக நியமனம் பெற்ற யாழ். மறைமாவட்டக்குருவும் கிளிநொச்சிப் பங்குத்தந்தையுமான அருட்தந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரர்தாஸ் அவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி காயத்திரி சயலவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டார்.

By admin