இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளருமான சஜித் பிரேமதாச அவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கடந்த 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் சமமான அபிவிருத்தி மேற்கொள்ளல், சமயங்கள் ஊடாக ஒற்றுமையை வலுப்படுத்தல், இளைஞர்களுக்கான கல்வி மற்றும் விளையாட்டுத்துறையை வினைத்திறன் மிக்கதாக மாற்றுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜீன ரணதுங்க மற்றும் காவிந்த மாகளந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin