நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக செயலரான திரு துரையப்பா அன்ரன் ஜெயகுமார் அவர்கள் நெதர்லாந்து அரசரது உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்து நாட்டில் வாழ்ந்துவரும் இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அமைப்புகள் மூலமாக இலங்கை மக்களுக்கும் நெதர்லாந்து மக்களுக்கும் செய்துவரும் சமூக சேவையை பாராட்டியும் நன்றி செலுத்தியும் முல்லை அமைப்பு நிர்வாகத்தினரின் முயற்சியினால் இவ் உயரிய விருதை கடந்த மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை இவர் பெற்று நொதர்லாந்துவாழ் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

By admin