யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக அங்கத்தவர்களுக்கும் கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்குமிடையிலான சந்திப்பு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாழ் மறைமாவட்ட பொது நிலையினர் கழக இயக்குநரும் கொழும்புத்துறைப் பங்குத் தந்தையுமான அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்களின் திருத்தூதுப் பணி தொர்பான கருத்துரையும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 60வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin