தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர் ஒன்றியக்கொடி ஏற்றப்பட்டு சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலியை தொடர்ந்து இளையோர் ஒன்றியத்தின் ஒழுங்குபடுத்தலில் பங்கு மக்கள் மறைக்கல்வி மாணவர்களை இணைத்து விளையாட்டுக்களும் மகிழ்வூட்டும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் பங்குமக்கள் மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் இளையோர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

By admin