தவக்கால சிறப்பு நிகழ்வாக குளமங்கால் பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களால்
முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானத்துடன் இணைந்த கள அனுபவ சுற்றுலா கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து சேந்தான்குளம் புனித அந்தோனியர் ஆலயத்தை தரிசித்து அங்கு நடைபெற்ற சிலுவைப்பாதை, திருப்பலி, கருத்தமர்வு, மகிழ்வூட்டல் நிகழ்வு, கடல் குளிப்பு, நட்பு மண் பூங்கா தரிசிப்பு போன்றவற்றில் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற மறைக்கல்வி மணவர்கள்மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களுடன்
இணைந்த குழுவினர் நெறிப்படுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் 120 வரையான மறைக்கல்வி மாணவர்களும் 40 வரையான மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.

By admin