குருநகர் பங்கு மறையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகள் சபையினரின் சங்கமம் இல்லத்தில் நடைபெற்ற இத்தியானத்தில் தியான உரைகள், குழு ஆய்வு, நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருளடையாளம், திருப்பலி என்பன இடம்பெற்றன.

சங்கமம் இல்ல இயக்குனர் அருட்தந்தை லொசிங்ரன் மற்றும் பருத்தித்துறை அஞ்சலியகம் இல்ல இயக்குனர் அருட்தந்தை ஜெயராஜன் கூஞ்ஞ ஆகியோர் இணைந்து நெறிப்படுத்திய இத்தியானத்தில் 25வரையான மறையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

By admin