இறை அழைத்தலை ஊக்குவிக்கும் நோக்கில் குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாணவர்களுக்கான கருத்தமர்வும் இடம்பெற்றது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரெட்ணம் அவர்கள் வளவாளராகக் கலந்து கருத்துரைகள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள், கலைநிகழ்வுகள் என்பவற்றின் ஊடாக மாணவர்களை வழிப்படுத்தினார்.

இக்கருத்தமர்வில் 130 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin