குருநகர் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை றெஜிராஜேஸ்வரன் அவர்களின் தலைமையில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 92 பிள்ளைகள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

By admin