குமுழமுனை பங்கு மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குமுழமுனை சென் அன்ரனிஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.

பங்கில் பணியாற்றி மறைந்த முன்னைநாள் பங்குத்தந்தையர்களை கௌரவிக்கும் முகமாக இல்லங்களுக்கு கென்சால்வே, பீற்றர் மற்றும் ஜேம்ஸ் பத்திநாதர் என பெயர் சூட்டப்பட்டு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

 

By admin