உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினால் மானிப்பாய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட குணமாக்கல் வழிபாடு கடந்த13ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு என்பவற்றை உள்ளடக்கிய இவ்வழிபாடுகளில் ஏராளமான மக்கள் பக்தியுடன் கலந்துகொண்டதுடன் இனிவரும் காலங்களில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் இதனை தொடர்சியாக நடாத்த ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

By admin